Thursday, March 20, 2008

உனக்கான என் முதல் பாடல்...

பல்லவி:
காதலெனும் போர்வாள் கொண்டு வந்தவள் நீயடி...
காதலி என்று உயிரை கொன்று சென்றாய் ஏனடி???
நீ எனக்கு இல்லை என்றால் நெஞ்சம் தாங்குமா???
உன் துணை இல்லை என்றால் என் விழிகள் தூங்குமா???


சரணம் 1:
சிறு பிள்ளையாய் நான் இருந்தேன், ஒரு பட்டாம்பூச்சியாய்
நீ வந்தாய்...
உன் திசை தேடி நான் இன்று பறக்கிறேன்...
இருட்டிலே நான் நடந்தேன், இடையில்லா ஒளியாய்
நீ வந்தாய்...
உன் நிழல் தேடி நான் இன்று நகர்கிறேன்...

உன்தன் நெஞ்சை கொள்ளை கொள்ள நானும் வந்தேன்...
உன் ஒரு துளி பார்வையால் என்னை நீ கடத்தி சென்றாயே...

நீ எனக்கு இல்லை என்றால் நெஞ்சம் தாங்குமா???
உன் துணை இல்லை என்றால் என் விழிகள் தூங்குமா???

சரணம் 2:
வேண்டாம் என்று விலகிச்சென்றேன் குழந்தை போல என் விரல் பிடித்தாய்...
வேண்டும் என்று உனக்காக வந்தேன் எதிரியின் வாளாய் வீழ்த்திச் சென்றாய்...
விரல்கள் சேர்க்கையில் விழிகள் மொத்தம் கனவுகள் தந்தாய்...
விட்டு பிரிகையில் அந்த கனவுகளை கழுவ கண்ணீர் தந்தாய்...

வரமென்னும் போர்வைக்குள் ஒளிந்து வந்த சாபம் தான் இந்த காதலோ???
அந்த சாபம் தன்னை வாங்கியபின் வாழ்தலும் இங்கே சாதலோ???


நீ எனக்கு இல்லை என்றால் நெஞ்சம் தாங்குமா???
உன் துணை இல்லை என்றால் என் விழிகள் தூங்குமா???


-தனிமைரசிகன்.


1 comment:

Bala said...

machi kalakura da...sooper

kudos da..keep it up :)