Sunday, March 16, 2008

எனக்கான இரங்கல்...

உனக்கு தெரியாமல் உன்னிடம் இருந்து
நான் திருடிய உன் புகைப்படம்...
நாம் விளையாடுகையில் உடைந்த
உன் வளையல் துண்டுகள்..
நீ பழையது என்று விட்டு விட்ட
உன் கைக்குட்டை...
காற்றில் மிதந்து வந்த
நீ சிக்கெடுத்த கூந்தல்...
நீ சுவைதப்பின் தவறவிட்ட
மிட்டாய் காகிதம்...
நீ வெட்டி எரிந்த நகத்துண்டுகள்...
நீ முகம் கழுவுகையில்
கண்ணாடியில் ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டு...
நீ பயணம் முடிந்ததும் தூக்கி எரிந்த பயணச்சீட்டு...
உன் கொலுசில் இருந்து தவறிய வெள்ளி முத்து...
இவைகளோடு உனக்காக
நான் சேர்த்துவைத்த கவிதைகள்...
எல்லாம் காத்திருக்கின்றன
உன் வருகையை எதிர் பார்த்துக்கொண்டு...
எனக்கான இரங்கல் கூட்டத்தில்...

-தனிமைரசிகன்.

1 comment:

நளன் said...

ரொம்ப நல்லா இருக்கு மச்சி :)