Sunday, March 16, 2008

கவிதை புத்தகமாய்...

உன் விழிகளுக்கு மட்டும்தான்
ஈர்ப்புவிசை என்று நினைத்திருந்தேன்...
பின்புதான் உணர்ந்தேன்
உன் புன்னைகைக்கு கூட ஈர்ப்பு அதிகமென்று...

உன்னை பற்றி எழுத வேண்டாமென்று
எவ்வளவோ முயற்சி செய்கிறேன்...
அணையை உடைக்கும் வெள்ளம்போல்
என் பேனா முனையை உடைக்கிறது
உன் எண்ணங்கள்...

நீ ஓவ்வொரு முறை என்னை பார்க்கும்போது
மொழிகள் தொலைத்தாலும்...
உன் ஒரு நொடி மௌனம் உணர்த்திவிடும்
உன் எண்ணங்களை...
உன் புன்னகை உணர்த்திவிடும் ஆயிரம் காவியத்தை...

உன் பெயருக்கு என் பேனாவும் டைரியும்
நன்றி சொல்கின்றன...
அவை ஒன்று சேர உன் பெயர் மட்டும்
காரணமாக இருப்பதால்...

உன்னை மயக்குவதற்காக இங்கு
நான் வார்த்தைகளை மாற்றவில்லை...
உன் பெயர் கண்டு மயங்கியதால்
வார்த்தைகள் கவிதையாகின...

நீ என்னை பற்றி யோசிக்கும் நிமிடங்களை
நான் இந்த உலகம் முழுதும்
உன் பெயரை கிறுக்க எடுத்துக்கொண்டேன்...
என்ன அதிசயம் இந்த உலகமே
கவிதை புத்தகமாய் மாறிவிட்டது...

-தனிமைரசிகன்.

No comments: