Sunday, March 16, 2008

வறுமை...

தரையில் படுக்க வைத்தால்
குழந்தைக்கு வலிக்குமே என்று
தன் மார்பின் மீது
படுக்க வைத்துக்கொண்டாள்
அந்த தாய்...
இருந்தும் குழந்தை அழுதது...
தாயின் மார்புக்கூடு குத்தியதால்...
சதையே இல்லாத மார்பில்
பால் மட்டும் எப்படி சுரக்கும்...???

-தனிமைரசிகன்.

No comments: