Sunday, March 16, 2008

உன் நினைவின் விளையாட்டு...

மௌனத்தின் பிம்பம் கலையாத
தனிமையான அறையில் இருக்கிறேன்...
இரத்தம் ருசிக்க காத்திருக்கும்
எதிரியின் போர்வாளாய்
என் நெஞ்சை கிழிக்கிறது
உன் நினைவு...
குருதி படிந்த தேகமாய் சாய்கிறேன் நான்...
தாய்மையின் பரிவோடு
என்னை மடியில் தாங்குகிறது
உன்னுடைய அதே நினைவு...
இன்னமும் புரியவில்லை
உன் நினைவின் விளையாட்டு...

-தனிமைரசிகன்.

No comments: