Sunday, March 16, 2008

உன் பிரிவு...

உன் பிரிவை தாங்காமல் உனக்கு
என் நினைவுகளை தூதனுப்ப முடிவு செய்தேன்...

தென்றலிடம் சொல்லி அனுப்பலாம் என்று நினைத்தேன்..
நீ இல்லாத காரணத்தினால்
தென்றலும் விடுமுறையில் சென்றுவிட்டது...

நிலவிடம் சொல்லி அனுப்பலாம் என்று நினைத்தேன்...
அது உன்னை தேடி அலைந்து கொண்டிருப்பதாக
தகவல் வந்தது...

என் தோட்டத்தில் உள்ள மலர்களிடம்
சொல்லி அனுப்பலாம் என்று நினைத்தால்...
உன் வருகை இல்லாமல்
என் தோட்டத்தில் மலர்கள் மலரவே இல்லை...

கடைசியில் என் இதயத்தை தூதனுப்பலாம்
என்று முடிவு செய்தேன்...
அதனிடம் பேசும் போதுதான் உணர்ந்தேன்
அது என்னை உன்னிடம்
தூதனுப்ப முடிவு செய்திருகிறதென்று...

-தனிமைரசிகன்.

No comments: