Tuesday, November 19, 2013

உன் விழிகளுக்கு மட்டும்தான்

ஈர்ப்புவிசை என்று நினைத்திருந்தேன்...

பின்புதான் உணர்ந்தேன்

உன் புன்னைகைக்கு கூட ஈர்ப்பு அதிகமென்று...

************************************


உன்னை பற்றி எழுத வேண்டாமென்று

எவ்வளவோ முயற்சி செய்கிறேன்...

அணையை உடைக்கும் வெள்ளம்போல்

என் பேனா முனையை உடைக்கிறது

உன் எண்ணங்கள்...

************************************

நீ ஓவ்வொரு முறை என்னை பார்க்கும்போது

மொழிகள் தொலைத்தாலும்...

உன் ஒரு நொடி மௌனம் உணர்த்திவிடும்

உன் எண்ணங்களை...

உன் புன்னகை உணர்த்திவிடும் ஆயிரம் காவியத்தை...

************************************

உன் பெயருக்கு என் பேனாவும் டைரியும்

நன்றி சொல்கின்றன...

அவை ஒன்று சேர உன் பெயர் மட்டும்

காரணமாக இருப்பதால்...

************************************


உன்னை மயக்குவதற்காக இங்கு

நான் வார்த்தைகளை மாற்றவில்லை...

உன் பெயர் கண்டு மயங்கியதால்

வார்த்தைகள் கவிதையாகின...

************************************


நீ என்னை பற்றி யோசிக்கும் நிமிடங்களை

நான் இந்த உலகம் முழுதும்

உன் பெயரை கிறுக்க எடுத்துக்கொண்டேன்...

என்ன அதிசயம் இந்த உலகமே

கவிதை புத்தகமாய் மாறிவிட்டது...

************************************


-தனிமைரசிகன்.

No comments: