மூன்றாம் பிறை
கடற்கரை மணலில் உன் மடியில்
சாய்ந்தபடி உன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்...
"என்ன பாத்துக்கிட்டே இருக்கீங்க" என நீ கேட்டதற்கு
"எனக்கு நிலவை ரசிப்பது பிடிக்குமென்றேன்"
நீ வெட்கப்பட்டுக்கொண்டே உன் முகத்தை
ஒரு கையால் கொஞ்சம் மறைத்துக்கொண்டாய்.
நான் மூன்றாம் பிறையையும் ரசிப்பவன் என்று தெரியாமல்...
-தனிமைரசிகன்
No comments:
Post a Comment