சுமை...
உன் நினைவுகளை
என் இமைகள் சுமக்க முற்பட்டதால்
என் நினைவுகள்
இன்று உன் உறக்கத்தை சுமந்து நிற்கின்றன
- தனிமைரசிகன்.
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
உன் நினைவுகளை
என் இமைகள் சுமக்க முற்பட்டதால்
என் நினைவுகள்
இன்று உன் உறக்கத்தை சுமந்து நிற்கின்றன
- தனிமைரசிகன்.
Posted by நான் at 12:40 AM 0 comments
அவள் மழையில் நனைந்து வந்தப்பின்
அவள் கூந்தல் சிந்தும் துளிகளில் நான் நனைகிறேன்...
என் இதயம் சுகம் கொள்ளகிறது மழையில் நனைந்ததைப்போல்...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 1:57 AM 0 comments
பதவி இழந்த அரசியல்வாதியாய்
புலம்பிக்கொண்டிருக்கிறது உன் தலையனை...
உன்னுள் நான் வந்ததினால்...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 2:35 AM 0 comments
இரண்டு குழந்தைகள் பெற்ற தாய்,
இரண்டு குழந்தைகளும் அழும் போது
ஒரு குழந்தைக்கு ஒரு மார்பகம் என்று தந்திருப்பாள்...
அதே மூன்றாவது குழந்தை பிறந்து
அதுவும் பசியால் அழுதால்,
அவள் யோசிப்பாளா இன்னொரு மார்பகம் வேண்டும் என்று???
இதோ என் இந்திய தாய்க்கு பிரிவினை பிரச்சனை...
அவளுக்கு 26 குழந்தைகள்...
குழந்தைக்கொரு ஆறு என்றிருந்திருந்தால்...
அவளுக்கு சந்தோஷம் தான்...
இன்று தமிழ் நாடென்னும் குழந்தையும்...
கர்நாடகம் எனும் குழந்தையும் இப்படி
அவளிடம் சுரக்கும் பாலுக்காக
தங்கள் ரத்தத்தை வழிய விட்டு கொண்டிருக்க மாட்டார்கள்...
மூடர்களே தாயின் மார்பில் சுரக்கும் பால்
எந்த குழந்தைக்கு சொந்தம் எனும் பிரச்சனை வந்தால்
தாய்க்கு இழுக்கு இல்லையா???
இந்தியத் தாயே எங்களை மன்னிபாயாக...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 11:19 AM 3 comments
பல்லவி:
காதலெனும் போர்வாள் கொண்டு வந்தவள் நீயடி...
காதலி என்று உயிரை கொன்று சென்றாய் ஏனடி???
நீ எனக்கு இல்லை என்றால் நெஞ்சம் தாங்குமா???
உன் துணை இல்லை என்றால் என் விழிகள் தூங்குமா???
சரணம் 1:
சிறு பிள்ளையாய் நான் இருந்தேன், ஒரு பட்டாம்பூச்சியாய்
நீ வந்தாய்...
உன் திசை தேடி நான் இன்று பறக்கிறேன்...
இருட்டிலே நான் நடந்தேன், இடையில்லா ஒளியாய்
நீ வந்தாய்...
உன் நிழல் தேடி நான் இன்று நகர்கிறேன்...
உன்தன் நெஞ்சை கொள்ளை கொள்ள நானும் வந்தேன்...
உன் ஒரு துளி பார்வையால் என்னை நீ கடத்தி சென்றாயே...
நீ எனக்கு இல்லை என்றால் நெஞ்சம் தாங்குமா???
உன் துணை இல்லை என்றால் என் விழிகள் தூங்குமா???
சரணம் 2:
வேண்டாம் என்று விலகிச்சென்றேன் குழந்தை போல என் விரல் பிடித்தாய்...
வேண்டும் என்று உனக்காக வந்தேன் எதிரியின் வாளாய் வீழ்த்திச் சென்றாய்...
விரல்கள் சேர்க்கையில் விழிகள் மொத்தம் கனவுகள் தந்தாய்...
விட்டு பிரிகையில் அந்த கனவுகளை கழுவ கண்ணீர் தந்தாய்...
வரமென்னும் போர்வைக்குள் ஒளிந்து வந்த சாபம் தான் இந்த காதலோ???
அந்த சாபம் தன்னை வாங்கியபின் வாழ்தலும் இங்கே சாதலோ???
நீ எனக்கு இல்லை என்றால் நெஞ்சம் தாங்குமா???
உன் துணை இல்லை என்றால் என் விழிகள் தூங்குமா???
-தனிமைரசிகன்.
Posted by நான் at 3:45 AM 1 comments
உன் கூந்தலில் இருந்து
திருடிய வாசத்தை தென்றல்
என் வீட்டு தோட்டத்தில்
தவறவிட்டு விட்டது போலும்...
வழக்கத்துக்கு மாறாக
அதிகமாய் மனக்கின்றன
என் தோட்டத்து மலர்கள்...
தென்றல் தீண்டியது கூட தெரியாமல்
அவ்வளவு மென்மையாய்
உறங்குகிறாய் நீ...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 5:39 PM 1 comments
வாடை,
தென்றல்,
புயல்,
இப்படி பல பரிமாணங்கள் காற்றுக்கு...
மழை,
ஆறு,
கடல்,
இப்படி பல பரிமாணங்கள் நீருக்கு...
தீ,
அக்னி,
அனல்,
இப்படி பல பரிமாணங்கள் நெருப்புக்கு...
மண்,
மனை,
பூமி,இப்படி பல பரிமாணங்கள் நிலத்திற்கு...
ஆகாயம்,
வான்வெளி,
மேகம்,
இப்படி பல பரிமாணங்கள் வானத்திற்கு...
தாய்,
சகோதரி,
தோழி,
மனைவி,இப்படி பல பரிமாணங்கள் பெண்ணிற்கு...
ஐம்புலன்கள் இல்லாமல் உயிர் வாழ முடியாதென்று
யாரோ கூறினார்களாம்...
நான் அதை மாற்ற விரும்புகிறேன்...
ஆறாம் புலனான பெண்ணில்லை என்றாலும்
வாழ முடியாதுதான்...
மாதராய் பிறப்பதற்கு மா தவம் செய்திட வேண்டுமாம்...
நான் அப்படி பிறக்க விரும்பவில்லை...
நான் நானாக பிறந்து
உன்னை மீண்டும் உணர வேண்டும் பெண்ணே....
பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 5:34 PM 1 comments