Tuesday, November 19, 2013

உன் விழிகளுக்கு மட்டும்தான்

ஈர்ப்புவிசை என்று நினைத்திருந்தேன்...

பின்புதான் உணர்ந்தேன்

உன் புன்னைகைக்கு கூட ஈர்ப்பு அதிகமென்று...

************************************


உன்னை பற்றி எழுத வேண்டாமென்று

எவ்வளவோ முயற்சி செய்கிறேன்...

அணையை உடைக்கும் வெள்ளம்போல்

என் பேனா முனையை உடைக்கிறது

உன் எண்ணங்கள்...

************************************

நீ ஓவ்வொரு முறை என்னை பார்க்கும்போது

மொழிகள் தொலைத்தாலும்...

உன் ஒரு நொடி மௌனம் உணர்த்திவிடும்

உன் எண்ணங்களை...

உன் புன்னகை உணர்த்திவிடும் ஆயிரம் காவியத்தை...

************************************

உன் பெயருக்கு என் பேனாவும் டைரியும்

நன்றி சொல்கின்றன...

அவை ஒன்று சேர உன் பெயர் மட்டும்

காரணமாக இருப்பதால்...

************************************


உன்னை மயக்குவதற்காக இங்கு

நான் வார்த்தைகளை மாற்றவில்லை...

உன் பெயர் கண்டு மயங்கியதால்

வார்த்தைகள் கவிதையாகின...

************************************


நீ என்னை பற்றி யோசிக்கும் நிமிடங்களை

நான் இந்த உலகம் முழுதும்

உன் பெயரை கிறுக்க எடுத்துக்கொண்டேன்...

என்ன அதிசயம் இந்த உலகமே

கவிதை புத்தகமாய் மாறிவிட்டது...

************************************


-தனிமைரசிகன்.

மழை

உன் மேனியை நீராடையால்

அலங்கரிக்க வானம் கொண்ட

நிர்வாணக் கோலம் தான்

மழையோ?

இல்லை உன் முகத்தை படம் எடுக்க முடியாமல்

வானம் என்னும் கண்ணாடி உடைந்து

சிந்தும் துகள்கள்தான் மழையோ?

இல்லை

சூரியன் உன்னோடு

விளையாட நீர்த்துளிகளாய்

அவதரித்தது தான் மழையோ?



***********************************************


யாருன்னை முதன் முதலாய்

மழையால் நனைப்பதென

மேகங்கள் கொள்ளும் ஊடல் தான்

இடியின் சத்தமோ???



***********************************************


வெகு நேரமாய் மழை துளியை

தாங்கி நிற்கும் இலை தன்னை

காற்று தீண்டியதும் தவறவிடும்

அந்த மழைத்துளியை...

நெடுங்காலம் நான் தாங்கி நிற்கும்

காதல் தன்னை உன் பார்வை தீண்டியதும்

தவறவிடும் என் மனத்துளியை போல்...


*************************************************


மழையில் நனைந்த உன் கூந்தலை

நீ வேகமாய் துவட்டிக்கொண்டிருக்க

தன் மீது கோவம் கொள்கிறாய் என்று

இன்னமும் வேகமாய் அழுகிறது மழை...


*************************************************


நீ சாலையில் நடந்து செல்கையில்

பெய்யும் மழை துளிகள் சுமந்து வரும்

உன் பிம்பங்களில் மோதி மோதியே

நெஞ்சம் நனைகிறது என் காதல்...


************************************************


உன் வீட்டு ஜன்னலில்

கைகள் நீட்டியபடியே

மழைத்துளிகளை நீ சேகரித்து

விளையாடிக் கொண்டிருந்தாய்

உன் செய்கையை கண்டு

என் இதயம் காதலை சேகரித்து மனம்

வினையாகிக் கொண்டிருப்பதை அறியாமல்...


***************************************************


முத்தெடுக்க முக்குளிக்க வேண்டுமாம்

நான் முத்தேடுகிறேன் நீ கால் நனைத்தும் நனைக்காமலும்

விளையாடி சென்ற தேங்கிய மழை நீரில்...

- தனிமைரசிகன்.

சிறு மீனாய் !

என் நினைவுகளில் எத்தனை சல்லடைகள் போட்டு தேடினாலும் நான் அகப்படவில்லை !
உன் நினைவுகளில் ஒற்றை தூண்டிலிட்டாலும் சிக்கி விடுகிறேன் சிறு மீனாய் !

- தனிமைரசிகன்.

இதயக்கண்ணாடி !

தினமும் உன்னை படம் எடுக்கும் உன் வீட்டு நிலைக்கண்ணாடிக்கு தெரியாது
அதைவிட அதிகமாய் உன் பிம்பம் விழும் இடம் என் இதயக்கண்ணாடி  என்று !



- தனிமைரசிகன்.