எனது தேசத்தாயின் அவலம்...
இரண்டு குழந்தைகள் பெற்ற தாய்,
இரண்டு குழந்தைகளும் அழும் போது
ஒரு குழந்தைக்கு ஒரு மார்பகம் என்று தந்திருப்பாள்...
அதே மூன்றாவது குழந்தை பிறந்து
அதுவும் பசியால் அழுதால்,
அவள் யோசிப்பாளா இன்னொரு மார்பகம் வேண்டும் என்று???
இதோ என் இந்திய தாய்க்கு பிரிவினை பிரச்சனை...
அவளுக்கு 26 குழந்தைகள்...
குழந்தைக்கொரு ஆறு என்றிருந்திருந்தால்...
அவளுக்கு சந்தோஷம் தான்...
இன்று தமிழ் நாடென்னும் குழந்தையும்...
கர்நாடகம் எனும் குழந்தையும் இப்படி
அவளிடம் சுரக்கும் பாலுக்காக
தங்கள் ரத்தத்தை வழிய விட்டு கொண்டிருக்க மாட்டார்கள்...
மூடர்களே தாயின் மார்பில் சுரக்கும் பால்
எந்த குழந்தைக்கு சொந்தம் எனும் பிரச்சனை வந்தால்
தாய்க்கு இழுக்கு இல்லையா???
இந்தியத் தாயே எங்களை மன்னிபாயாக...
-தனிமைரசிகன்.
3 comments:
super machi... situvation kavithai... i like it...
Super da....keep it up....
excellent!! :-)
i wish deve gowda could read this one.. or kalaignar.. or all those mindless idiots who are staging protests! life giving water has become mere politics :(
as u said naggy, let our kind mother forgive us.
Yet another brilliant piece, keep it up mache!!
Post a Comment