Sunday, March 16, 2008

மென்மை...

உன் கூந்தலில் இருந்து
திருடிய வாசத்தை தென்றல்
என் வீட்டு தோட்டத்தில்
தவறவிட்டு விட்டது போலும்...
வழக்கத்துக்கு மாறாக
அதிகமாய் மனக்கின்றன
என் தோட்டத்து மலர்கள்...
தென்றல் தீண்டியது கூட தெரியாமல்
அவ்வளவு மென்மையாய்
உறங்குகிறாய் நீ...


-தனிமைரசிகன்.

1 comment: