மாதராய் பிறப்பதற்கு...
வாடை,
தென்றல்,
புயல்,
இப்படி பல பரிமாணங்கள் காற்றுக்கு...
மழை,
ஆறு,
கடல்,
இப்படி பல பரிமாணங்கள் நீருக்கு...
தீ,
அக்னி,
அனல்,
இப்படி பல பரிமாணங்கள் நெருப்புக்கு...
மண்,
மனை,
பூமி,இப்படி பல பரிமாணங்கள் நிலத்திற்கு...
ஆகாயம்,
வான்வெளி,
மேகம்,
இப்படி பல பரிமாணங்கள் வானத்திற்கு...
தாய்,
சகோதரி,
தோழி,
மனைவி,இப்படி பல பரிமாணங்கள் பெண்ணிற்கு...
ஐம்புலன்கள் இல்லாமல் உயிர் வாழ முடியாதென்று
யாரோ கூறினார்களாம்...
நான் அதை மாற்ற விரும்புகிறேன்...
ஆறாம் புலனான பெண்ணில்லை என்றாலும்
வாழ முடியாதுதான்...
மாதராய் பிறப்பதற்கு மா தவம் செய்திட வேண்டுமாம்...
நான் அப்படி பிறக்க விரும்பவில்லை...
நான் நானாக பிறந்து
உன்னை மீண்டும் உணர வேண்டும் பெண்ணே....
பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்...
-தனிமைரசிகன்.
1 comment:
அருமையான வரிகள்
Post a Comment