சீ போ
இரவெல்லாம் கண்விழித்து
நான் எத்தனை
கவிதைகள் எழுதினாலும்
அத்தனை கவிதைகளும்
தோற்றுப்போகின்றன
நீ சொல்லும்
"சீ போ"
எனும் வார்த்தைக்கு முன்னால்...
-தனிமைரசிகன்
தொலைந்த என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் மீண்டும் தொலைவதற்காக... தேடல் தொடரும், தொலைதல் இருக்கும் வரை...
No comments:
Post a Comment