மழை
உன் வீட்டில் உன்னை விட்டுவிட்டு
நான் சற்று தூரம் சென்றவுடன் என்னை அழைத்தாய்...
"என்ன?" என்று கேட்டதற்க்கு
"மழை தூறுது நனையாம பாத்துப் போங்க" என்றாய்!!!
பதிலுக்கு நான்
"உன் காதல் எனக்கு குடையாய் இருக்கையில் நான் எப்படியடி நனைவேன்"
என்றேன்!!!
சற்றும் யோசிக்காமல் மண்ணைத் தழுவும் மழைதுளி போல
ஓடி வந்து என்னை தழுவிக்கொண்டாய்...
அன்றுதான் முதல் முதலாய் இருவரும் ஒன்றாக நனைந்தோம்
மழையில் அல்ல
நம் காதலில் !!!
-தனிமைரசிகன்
1 comment:
adikadi nanayathiga da.. nallathu illa yarukum
Post a Comment